நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்..அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் !

நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! – திருவனந்தபுரத்தில் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விமான நிலையத்திலிருந்து, 135 பயணிகளுடன் ஏஐ 657 எனும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. இதனிடையே அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாம்பை கடித்தே கொன்ற 1 வயது குழந்தை… வீட்டு வாசலில் நடந்த பரபரப்பு சம்பவம்!

மும்பை-திருவனந்தபுரம் ஏர் இந்தியா விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு விரிகுடாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. விமானம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 135 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

விமானத்தையும், விமான நிலையத்தையும் சோதனை செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தற்போது விமானம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அச்சுறுத்தல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

வாழைத்தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
மேலும் செய்திகள்…

இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் விமான நிலையம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Air India
,
kerala
,
thiruvananthapuram

Related posts

J&K’s Contrasting Realities: Terrorist Killed In Encounter As Anti-Israel Protests Erupt Amid Poll Campaigns

SEBI To Tighten The Noose On F&O After ₹1.8 Lakh Crore Loss In Futures & Options: All Investors Eyes Board Meeting Today

Amity University Student Group Mercilessly Thrashes Boy With Hockey Sticks & Fists In Noida; Video Goes Viral