நட்புப் பயணம் தொடரட்டும்…முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது பாராட்டுகளை இன்று நடந்த பொதுக்குழுவில் எங்கள் தொண்டர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். மக்கள் நலன்களுக்கான நமது நட்புப் பயணம் தொடரட்டும்.என தெரிவித்துள்ளார்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்