நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கடந்த ஆக.8 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இதையும் படிக்க: மகாராஜா – சிங்கம்புலி குறித்து விஜய்யின் பார்வை… ஆச்சரியப்பட்ட இயக்குநர்!

தொடர்ந்து, திருமணம் எப்போது? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், இன்று தன் வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்யும் புகைப்படங்களை சோபிதா துலிபாலா வெளியிட்டுள்ளார்.

இதனால், இன்னும் சில நாள்களில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி