நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் செப்.24 முதல் 26-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் செப்.26-ஆம் தேதி காலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்திலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

வஃக்ப் சட்டத்திருத்த மசோதா: மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள்