நாளை தமிழகம் வருகிறார் அமித் ஷா

புதுடெல்லி ,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வைரவன்பட்டி பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமித் ஷா தமிழகம் வருகிறார். மாலை 3:20 மணிக்கு தனி விமானம் மூலம் வாரணாசியில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹேலி பேட் மூலம் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 5:20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் அமித் ஷா மாலை 5:25 மணிக்கு தனி விமான மூலம் திருப்பதி நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக போலீசாரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்