நிர்மலா சீதாராமன் தலைமையில் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மத்திய நிதித்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் கடந்த 9-ந்தேதி பதவியேற்றார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் வரும் 22-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கவுன்சில் உறுப்பினர்களிடம் விரைவில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளை உள்ளடக்கிய 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த அக்டோபர் 7-ந்தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?