நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு

கோட்டா,

ராஜஸ்தானை சேர்ந்தவர் பகிஷா (வயது 18). கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்திருந்தார். அதே பகுதியில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் நடந்து முடிந்த நீட் தேர்வில் அவர் கலந்து கொண்டு தேர்வெழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. அதில் குறைவான மதிப்பெண்களே பகிஷா எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பகிஷா அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டாவில் இந்தாண்டு இதுவரை போட்டி தேர்வுக்களுக்கு பயிற்சி பெற்று தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்