நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் – போர் பதற்றத்தை தணிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த உரையாடலின்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். அவரிடம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். மேலும் பணயக்கைதிகளின் விடுதலை, போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதன் அவசியம் குறித்து விவாதித்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Appreciate PM @netanyahu’s phone call and warm wishes on India’s 78th Independence Day. We discussed the current situation in West Asia. Emphasized on the need to de-escalate the situation. Reiterated our call for immediate release of all hostages, ceasefire and need for…

— Narendra Modi (@narendramodi) August 16, 2024

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்