நெருங்கும் தீபாவளி.. தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், முதல்வர் வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தனியார் மயமாக மாற்றப்படுகிறது என்கிற செய்தி உண்மை இல்லை, சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் பொழுது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் செய்யக்கூடியவைகள் செய்யக்கூடாதவைகள் என்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைப்பது என்பது வழக்கம், அந்த வகையில் இன்று தீபாவளி தீக்காய சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவும் குழந்தைகளுக்கு ஐந்து படுகைகளுடன் என மொத்தமாக 25 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது, தீபாவளிக்காக பிரத்தியேகமாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.

தீக்காய சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள், ஆண்டு தோறும் 2 ஆயிரம் என்ற அளவுக்கு தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள், முதல்வர் வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து இருக்கிறது, இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டது.

குழந்தைகள், நோயாளிகள், வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தக் கூடாது.

வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்துப் பிரித்துப் பார்க்கக் கூடாது,

பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது,

சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது,

பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் ஒரு வாலியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது செல்பி எடுக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தனியார் மயமாக மாற்றப்படுகிறது என்கிற செய்தி உண்மை இல்லை, சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் உயிரிழப்புகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?

சென்செக்ஸ் 603 புள்ளிகளுடனும், நிஃப்டி 158 புள்ளிகளுடன் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!