நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, 29 விரைவு ரயில்களின் சேவையில் ஆக.14-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சில விரைவு ரயில்களின் சேவையில் ஆக.17-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு ஆக.16-ம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: சென்னை எழும்பூர் – திருநெல்வேலிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631), எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய பொதிகை விரைவு ரயில் (12661), எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (12633), எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் – தூத்துக்குடிக்கு ஆக.15, 17 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு முத்து நகர் விரைவு ரயில்(12693), சென்னை எழும்பூர் – மதுரைக்குஆக.15-ம் தேதி இரவு 9.40 மணிக்கு பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர் – தஞ்சாவூருக்கு ஆக.15-ம் தேதி இரவு 10.15 மணிக்கு உழவன் விரைவு ரயில் (16865) ஆகிய ரயில்கள் எந்த மாற்றமும் இன்றி புறப்பட்டு செல்லும்.

செங்கோட்டை – சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் பொதிகை விரைவு ரயில் (12662), செங்கல்பட்டு – எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டில் நிறுத்தப்படும்.

திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் விரைவு ரயில் (12632), செங்கல்பட்டு – எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி – சென்னை எழும்பூருக்கு ஆக.15-ம் தேதி புறப்படும் விரைவு ரயில் (12634), செங்கல்பட்டு -எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பி விடப்படும் ரயில்கள்: கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு ஆக.14-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (12641), விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக திருப்பிவிடப்பட உள்ளது. கூடுதல் நிறுத்தமாக, பெரம்பூர் ரயில் நிலையத்தில் காலை 10.55 மணிக்கு நின்று செல்லும்.

ஹவுரா – திருச்சிராப்பள்ளிக்கு ஆக.15-ம் தேதி விரைவு ரயில் (12663), பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக திருப்பிடப்படும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம் மார்க்கத்தில் செல்லாது.

சென்னை எழும்பூர் – காரைக்காலுக்கு ஆக.17-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (16175), 1.25 மணி நேரம் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்