பஞ்சாப்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 7 பேர் படுகாயம்

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் அந்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்