பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் மந்திரி கைது

பெங்களூரு,

கர்நாடக மாநில மகரிஷி வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் மகரிஷி வால்மீகி வளர்ச்சி வாரியத்தின் முன்னாள் தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், பிற்படுபடுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக இருந்த நாகேந்திரா தனது மந்திரி பதவியை கடந்த மாதம் 6ம் தேதி ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி முதல் நேற்று முன் தினம் இரவு வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் மந்திரியுமான நாகேந்திராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் முன்னாள் மந்திரி நாகேந்திராவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி