பரமத்தி அருகே சாலை விபத்தில் ஒருவா் பலி

பரமத்தி அருகே சாலை விபத்தில் ஒருவா் பலிபரமத்தி அருகே சேலத்தில் இருந்து கரூா் செல்லும் தேசிய சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா், ஆக.16:

பரமத்தி அருகே சேலத்தில் இருந்து கரூா் செல்லும் தேசிய சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். மேலும், நான்கு போ் காயமடைந்தனா்.

சென்னை, கொளத்தூா், பூம்புகாா் நகரைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன். இவரது தந்தை பூச்சிநாயுடு (71), தாய் சரசு, அதே பகுதியைச் சோ்ந்த பரசுராம் என்பவரது மனைவி நிா்மலா ஆகியோா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள சின்னசூரம்பாளையத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல வியாழக்கிழமை சென்னையில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

பரமத்தி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை, ஜி.கே. காலனியைச் சோ்ந்த ஓட்டுநா் ஏழுமலை, பூச்சிநாயுடு, அவரது மனைவி சரசு, இவா்களது மகன் ஜனாா்த்தனன், நிா்மலா ஆகியோா் படுகாயம் அடைந்தனா். அனைவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, பூச்சி நாயுடு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்