பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.சென்னை சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரெயில், சென்னை சென்டிரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்