பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் நேற்று ஜீப்பில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு அனைவரும் ஜீப்பில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்