பாகிஸ்தானில் திருநங்கைகளை ஆணவக் கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரில், ஞாயிற்றுக்கிழமையில் (அக். 20) இரண்டு திருநங்கைகளை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு திங்கள்கிழமையில் (அக். 21) காவல்துறையினரை திருநங்கைகள் சமூக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருநங்கைகளைக் கொலை செய்ததாக மூவருமே ஒப்புக் கொண்டனர்.
பாகிஸ்தானில் திருநங்கைகள் மீதான ஆணவக் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்; திருநங்கைகள் பெரும்பாலும் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்களுக்கு ஆளாவதாகவும் கூறினர்.
இதையும் படிக்க: கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!