பாகிஸ்தான்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

லாகூரிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் நேற்று பயணிகள் வேன் ஒன்று டிரக் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

அவசர சேவை மீட்பு அளித்த தகவல்படி, விபத்து மிகவும் ஆபத்தானது, பலர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. .

மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு செல்லும் வழியிலேயே அவர்களில் 11 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர், அதே நேரத்தில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 13 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் உறவினர்களைப் பார்க்க முல்தானுக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுக்கிறது.

இதனிடையே காயமடைந்த ஒன்பது பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிக வேகம் காரணமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் வேன் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்