பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட 5 பேர் பலி!

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட 5 பேர் பலி!பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலைகோப்புப் படம்

பாகிஸ்தானில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் திகான் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது நேற்று (ஜூலை 15) அதிகாலையில் சுமார் 10 பேர் கொண்ட பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்தவுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்து, பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் குழுவில் இருந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இருப்பினும், சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 5 ஊழியர்கள் மற்றும் 2 பாதுகாப்புப் படை வீரர்களும் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடந்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்வர் அலி அமீன் கந்தாபூர், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்