பாம்பிற்கு கருணை காட்டும் ஸ்னேக் ஸ்பீக்… 15 வயது சிறுவனின் முயற்சி..

பாம்பிற்கு கருணை காட்டும் ஸ்னேக் ஸ்பீக்… 15 வயது சிறுவனின் முயற்சி..

பாம்புகளை காப்பாற்ற நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன்!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீகாகுலவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பத் காந்தி மஹந்தி. இந்தச் சிறுவன் ஸ்னேக் ஸ்பீக் (Snake Speak) என்ற நிறுவனத்தை தொடங்கி, பாம்புகளை காப்பாற்ற தன் பங்களிப்பை செய்து வருகிறான். மேலும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சிறுவன் எடுத்துரைக்கிறான்.

‘கிரீன் மெர்சி’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் சம்பத் தனது தந்தையுடன் விலங்குகளைப் பார்த்து வளர்ந்து வந்தார். வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அழிந்து வரும் பாம்புகளை காப்பாற்றும் உறுதியுடன் ஸ்னேக் ஸ்பீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாம்புகளை காப்பாற்றும் நோக்கத்துடன் நான்கு நண்பர்களுடன் இணைந்து இந்த அமைப்பை சம்பத் நிறுவினார்.

விளம்பரம்

சம்பத் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்னேக் ஸ்பீக் என்ற அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். ஜோஷ்யா நடாலியா அமைப்பின் சமூக ஊடகங்களை கவனித்துக் கொள்கிறார். சம்பத் பாம்புகளை மீட்கும் நடவடிக்கைகளிலும், ​ சாகேத் ராம், பார்கவா ஆகியோர் கேமரா மூலம் அதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் வேலைகளை செய்கின்றனர்.

இதையும் படிங்க: உடல்நலப் பிரியர் முதல் உணவுப் பிரியர் வரை… மாலைப்பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கும் ஸ்பாட்…

பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, யாரேனும் தங்கள் வீட்டு முற்றத்தில் பாம்புகளைக் கண்டால், சம்பத் குழுவினர் வந்து அவற்றை மீட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விடுவிப்பார்கள். மேலும், பாம்புகளைப் பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களைப் பற்றிக் கற்பித்து வருகிறது ஸ்னேக் ஸ்பீக் அமைப்பு.

விளம்பரம்

கடந்த ஆண்டு ‘ஸ்னேக் ஸ்பீக்’ அமைப்பை சம்பத் தொடங்கினார். பாம்புக்கடிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊர்வனவற்றைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை அகற்றுவது குறித்து சமூகங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

தனது இயக்கத்தை பற்றி சம்பத் கூறுகையில், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டபோது மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து தான் ஸ்னேக் ஸ்பீக் தொடங்க உந்துதல் ஏற்பட்டது. கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே எங்ககளின் நோக்கம் என்று அவர் லோக்கல் 18 நியூஸ் தளத்திடம் விளக்கினார்.

விளம்பரம்

இதையும் படிங்க: தமிழக விவசாயத்தின் தாய்மடி… பிரம்மாண்டமான மேட்டூர் அணையின் 91வது பர்த்டே…

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கு பாம்புகள் மிகவும் முக்கியம் ஆகும். பாம்புகளை கொல்வதால் பல்லுயிர் பெருக்கத்திற்கு கேடு ஏற்படும் என்கிறார் சம்பத். பாம்புகள் விவசாயிகளின் நல்ல நண்பர்கள். விவசாயிகளின் பயிர்களை அழிக்கும் எலிகளை சாப்பிடுவது ஏன் தெரியுமா? இந்த உணவு பிரமிடில் எந்த உயிரினமும் இல்லை என்றால் பெரும் பிரச்சனை ஏற்படும். எனவே, பாம்புகளின் எண்ணிக்கை குறைவதால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பாம்புகளை கொல்லக்கூடாது என சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

பாம்பு கடித்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும், விவசாயிகள், குழந்தைகள் பாம்புகளைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் கூறுகிறார் சம்பத். அவைகளிடமிருந்து விலகி, பாம்பு பிடிப்பவர்களை அழைத்து, அதைப் பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விடுவிப்பதன் மூலம், நாம் அவர்களின் மீட்பர்களாக மாறுகிறோம். ஏற்கனவே பல பாம்பு இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும், அவற்றை காப்பாற்றுவது நமது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Local News
,
snake

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்