பாராலிம்பிக் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதில் ஈரானின் சரே ஜவன்மர்டி தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இத்துடன் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் மொத்தம் 4 பதக்கங்கள் அடங்கும்.

பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 19 இடத்திலும் உள்ளன.

Related posts

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!

உங்க பையன் மட்டும் நல்லா இருக்கணுமா? ரசிகர் மன்ற நடிகர்களை விளாசிய அரவிந்த் சாமி!

காங்கிரஸ் நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!