பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அணி இதுவரை 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பாரா ஒலிம்பிக் தொடரில் வலிமையுடன் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த சச்சின் சர்ஜிராவுக்கு வாழ்த்துகள்.அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா