பாரா வில்வித்தை: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி!

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் பாரா வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரா வில்வித்தையில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டுள்ள தங்கப்பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு!

ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் ஆஸ்திரேலியாவின் டேமோன் கெண்டன் ஸ்மித்-அமண்டா ஜென்னிங்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆடவருக்கான பாரா வில்வித்தையில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வென்று தந்தவரான ஹர்விந்தர் சிங் பூஜாவுடன் இணைந்துள்ளதால் இரண்டாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆனாரா விஜய்? கோட் – திரை விமர்சனம்!

இந்த இணை முதல் சுற்றில் 31-18 மற்றும் 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றில் 27-33 மற்றும் 24-33 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்தாலும் முடிவில் 16-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதியில் இந்த இணை போலாந்து இணை சந்திக்கவுள்ளனர்.

வெனிஸ் திரைப்பட விழாவில் பார்வையாளர்களிடம் 11 நிமிட பாராட்டைப் பெற்ற ஜோக்கர் 2!

ஹரியாணாவில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஹர்விந்தர், ஒன்றரை வயதாக இருந்தபோது, ​​டெங்குவால் பாதிக்கப்பட்டு, அவருக்கு செலுத்தப்பட்ட ஊசிகளின் பக்கவிளைவுகளால், அவரது கால்கள் செயலிழந்தன.

இதேபோல, 1997 ஆம் ஆண்டில், பூஜா ஜத்யன் இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது, ​​​​அதிக காய்ச்சலுக்காக மருத்துவர்களின் அலட்சியத்தால் தவறான ஊசி போடப்பட்டதால் இடது காலில் போலியோ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை