பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியின் காலிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

வழக்கமான ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 1 கோல் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் மார்ட்டோன் லீ ஒரு கோல் அடித்தார்.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

A famous victory!!!! What a game. What a Shootout. Raj Kumar Pal with the winning penalty shot. We are in the Semis. India India 1 – 1 Great BritainSO: 4-2 Harmanpreet Singh 22' (PC) Lee Morton 27' #Hockey#HockeyIndia#IndiaKaGame#HockeyLayegaGold… pic.twitter.com/S01hjYbzGr

— Hockey India (@TheHockeyIndia) August 4, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி