பாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஜோடி

அனந்த்ஜீத் சிங் நருகா – மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிக்கணக்கில் சீன அணியிடம் தோல்வி கண்டது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா – மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, சீனாவை எதிர்கொண்டது.

இதில் அனந்த்ஜீத் சிங் நருகா – மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிக்கணக்கில் சீன அணியிடம் தோல்வி கண்டு நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா