பாரீஸ் ஒலிம்பிக்: முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட அஷ்வினி பொன்னப்பா இணை

அஷ்வினி பொன்னப்பா இணை, கொரியாவின் கிம் சோ யோங் – காங் ஹீ யோங் இணை உடன் மோதியது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டில் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ – அஷ்வினி பொன்னப்பா இணை, கொரியாவின் கிம் சோ யோங் – காங் ஹீ யோங் இணை உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிம் சோ யோங் – காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ – அஷ்வினி பொன்னப்பா இணையை வீழ்த்தியது.

தனிஷா க்ராஸ்டோ – அஷ்வினி பொன்னப்பா இணை தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா – ஷிஹாரு ஷிடா இணை உடன் மோத உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா