பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

ஈரோடு-திருப்பூா் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மற்றும் வரும் 30-ந்தேதி ஈரோடு ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். திருச்சியிலிருந்து ஈரோடு வரை மட்டுமே ரெயில் இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் மாலை 5 மணிக்குப் பிறகு ஈரோட்டில் இருந்து இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயிலின் நிறுத்தங்களையே கொண்டிருக்கும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி ஜி.மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து