பிரதமர் மோடியின் படுதோல்வி, மணிப்பூர் மன்னிக்காது: மல்லிகார்ஜுன கார்கே

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், முதல்வர் பிரென் சிங்கை உடனடியாக தகுதிநீக்கம் செய்துவிட்டு, மத்திய அரசு, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அவசர நிலைக்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு அமைக்கப்பட்ட மணிப்பூர் விசாரணை ஆணையம் அதன் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் படுதோல்வி இது என்றும், மணிப்பூர் எப்போதுமே மன்னிக்காது என்றும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்