பிரதமர் மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் திமுக மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான காரணங்கள் மூன்று; அதில் முதல் காரணம் பிரதமர் மோடிதான். வெள்ளம், புயலுக்கு வராத மோடி தேர்தல் அறிவித்ததும் 8 முறை தமிழகத்திற்கு வந்தார்.

திமுக அரசின் சாதனைகள், திமுக முன்னோடிகளும் தேர்தல் வெற்றிக்கு காரணம். பிரதமர் மோடியின் பருப்பு வடநாட்டில் கூட வேகலாம்; தமிழ்நாட்டில் வேகாது. திமுகவின் மூத்த முன்னோடிகள் வழியில் அயராது உழைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வோம். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தி.மு.க ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme