பிளாக் திரைகள் அதிகரிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியா பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா. அவரது கதை தேர்வுகளும், திரைப்படங்களும் சரியாக இருப்பதில்லை என ரசிகர்களிடம் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை கருத்தில்கொண்டோ என்னவோ, நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இதையும் படிக்க: வேட்டையன்: மழையால் வெறிச்சோடிய திரையரங்குகள்!

கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. அக். 11 ஆம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் ரூ. 2 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது