பீகார்: கங்கையில் நீராடியபோது 4 பேர் நீரில் மூழ்கி பலி

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நயா டோலா கிராமத்தை சேர்ந்தவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதிக்கு சென்றுள்ளனர். மொத்தம் 11 பேர் ஆற்றில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் 7 பேர் பத்திரமாக நீந்தி கரையை சேர்ந்தனர். எனினும், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? – ராமதாஸ்

சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்களுக்கு விருது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்