பீகார்: குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் பலி

பாட்னா,

பீகார் மாநிலம் பேங்கா மாவட்டம் ஆனந்த்பூர் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர்.

குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமிகள் 4 பேரும் குளத்தில் மூழ்கினர். இச்சம்பவத்தில் 4 சிறுமிகளும் தண்ணீரில் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஊர் மக்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிகளில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்