பீகார் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்: 7 பேர் பலியான பரிதாபம்

ஜெகனாபாத்,

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள சித்தேஷ்வர்நாத் கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

மக்தூம்பூர் பகுதியில் உள்ளவானவாரில் அமைந்துள்ள பாபா சித்தேஷ்வர் நாத் கோவிலில் இந்த சம்பவம் நடந்தது. ஏழு பேரின் மரணத்தை அரசு நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மக்தும்பூர் மற்றும் ஜெகனாபாத் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக ஜெகனாபாத் மாவட்ட கலெக்டர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூரில் உள்ள பாபா சித்நாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். நாங்கள் எல்லாவற்றையும் கண்காணித்து வருகிறோம், இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று அலங்கிரிதா பாண்டே கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்