புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒழுகிய மழை நீர் – மத்திய அரசு விளக்கம்!

புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒழுகிய மழை நீர் – மத்திய அரசு விளக்கம்!

நாடாளுமன்ற மேற்கூரை ஒழுகியது

புதிதாக கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் ஒழுகியது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் வைத்த நிலையில், மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் வராண்டா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கசிந்தது. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த காட்சிகளை பகிர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

விளம்பரம்

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சிறிய கசிவுதான் ஏற்பட்டதாகவும் அது உடனடியாக கண்டறியப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது. சூரிய ஒளி அதிகளவில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்ணாடி குவிமாடங்களில் பிசின் போன்ற பொருட்கள் பெயர்ந்ததால் இந்த கசிவு ஏற்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி பல்லாவரம் வரை மட்டுமே – முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத்துக்கு வெளியே தேங்கி நின்ற மழைநீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்