போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை,
திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை. இவர் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர். ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாருக்கும் ரவுடி துரைக்கும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த ரவுடி துரை?
ரவுடி துரை என்கிற ( துரைசாமி) மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 70 வழக்குகள் உள்ளன. 2023-ல் திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்றபோது தப்பி சென்றவர் ரவுடி துரை.