புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில், சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக் கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம். இதற்கு நிதித்துறை உரிய அனுமதி அளித்துள்ளது என்று கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு 10, 12-ம் வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டு வரையில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இந்த வகுப்பினர் பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். நடப்பு கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்புகள் வரையில் அனைத்து வகுப்புகளும் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின், சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் தொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் கடந்த 26-ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இக்கு புதுச்சேரி அரசு செலுத்தும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிநாள் வரும் அக்டோபர் 4-ம் தேதியாக உள்ளது. இதை செலுத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இதில் ஆளுநர், முதல்வர் தலையிட வேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான செய்தி நமது நாளிதழில் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தேர்வுக் கட்டணம் தொடர்பாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது. தேர்வுக் கட்டணத் தொகையானது நடப்பு 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 26-ம் தேதி தேர்வுக் கட்டணம் மற்றும் செலவின அனுமதிக்கு நிதித்துறை பட்ஜெட் அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வுக் கட்டணத்தை செலுத்துவோம். இது கல்வித்துறையின் பொறுப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை மாநகராட்சியின் 6% சொத்து வரி உயர்வு தீர்மானம் ஏற்புடையது அல்ல: ஜி.கே.வாசன்