புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடுமுறையை நீட்டித்து 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடுமையான வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி