புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இரவு 9.10, 9.30 புறப்படும் ரயில்கள் செப்.5, 7 தேதிகளிலும் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் செப்.4, 6, 8 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் செப்.5, 7 தேதிகளில் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: கடற்கரையிலிருந்து இரவு 10.40, 11.05, 11.30 11.59 மணிக்கு புறப்படும் தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் செப்.5, 7 தேதிகளிலும், அதிகாலை 3.55 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு ரயில் செப்.4, 6, 8 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து இரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் செப்.5, 7 தேதிகளில் எழும்பூா் வரை மட்டும் இயக்கப்படும்.

திருவள்ளூா்/கும்மிடிப்பூண்டி: சென்னை கடற்கரையிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், மறுமாா்க்கமாக இரவு 9.35 மணிக்கும் புறப்படும் ரயில் செப்.5, 7 தேதிகளில் ரத்து செய்யப்படும். கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் ரயில் செப்.6, 8 தேதிகளிலும், கும்மிடிப்பூண்டிக்கு 10.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் செப்.5, 7 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் ரயில் செப்.5, 7 தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!