புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா முதல்-மந்திரிகள், அருணாச்சல பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதல்-மந்திரிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிதேசங்களின் நிதியமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது:-

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் வருவாய் 6 மாதங்களில் அதிகரித்து ரூ.6909 கோடியாக உள்ளது.மத்திய அரசின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மாநில அரசுகளின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அரசு மற்றும் தனியாரிடமிருந்து, வரி விலக்கு பெற்றவர்களிடம் இருந்து ஆராய்ச்சி நிதியைப் பெறலாம் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில் இது 12%லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது.

ஜிஎஸ்டியில் உள்ள எதிர்மறையான விமர்சனங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவுவை எடுக்க வருவாய்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அமைச்சர்கள் கொண்ட 2 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு. பீகார் துணை முதல்-மந்திரி தலைமையில் இக்குழு செயல்படும்.

இது தொடர்பாக ஆராய்ந்து அக்டோபர் 2024-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில் நவம்பரில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். மருத்துவ சுகாதாரக்காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்