பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; ஜனாதிபதி ரக்சா பந்தன் வாழ்த்து

புதுடெல்லி,

நாடு முழுவதும் ரக்சா பந்தன் தினம் இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை கொண்டாடும் பண்டிகையாக ரக்சா பந்தன் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரக்சா பந்தனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், இந்த ரக்சா பந்தன் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளிடையே அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை உணர்வை அடிப்படையாக கொண்ட இந்த பண்டிகை, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசம் மற்றும் மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது என பதிவிட்டு உள்ளார்.

இந்த பண்டிகை தினத்தில், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என நாட்டிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு