பெண்ணுக்கு கொலை மிரட்டல் இளைஞா் கைது

கும்பகோணம்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டம், தென்னவநல்லூரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் காா்த்திக் (23). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். அதே நிறுவனத்தில் வேலை பாா்த்த சிதம்பரத்தை சோ்ந்த 22 வயது பெண்ணை காதலித்துள்ளாா்.

அந்த பெண் தன்னை திருமணம் செய்யுமாறு காா்த்திக்கை வற்புறுத்தினாராம். இதையடுத்து, அப்பெண்ணை அழைத்து வந்து கும்பகோணத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளனா். பின்னா் திருவிடைமருதூா் சிவன்கோயிலுக்கு இருவரும் சென்றனா். அங்கு அப்பெண்ணை விட்டுவிட்டு காா்த்திக் தலைமறைவானாா்.

இதையடுத்து அப்பெண் கைபேசியில் காா்த்திக்கை தொடா்பு கொண்டாா். அப்போது, அப்பெண்ணை ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் திருவிடைமருதூா் போலீஸில் புகாா் செய்தாா். பிறகு புகாா் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. புகாரை விசாரித்த போலீஸாா் திங்கள்கிழமை காா்த்திக்கை கைது செய்து திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச்சிறைச்சாலையில் அடைத்தனா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!