பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை.. வெளியான அதிர்ச்சி ஆடியோக்கள்

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை.. வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோக்கள்!

கொல்கத்தாவில் பணியின்போது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தற்கொலை என்று ஆர்.ஜிகர் மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள ஆடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மேற்குவங்க அரசால் நடத்தப்படும் பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்று, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜிகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கு 4ஆவது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டு, லென்சுகள் சுக்குநூறாக்கப்பட்டு கண்ணில் ரத்தம் வழிந்தோடியப்படி பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகுதான், மருத்துவர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் வெட்டவெளிச்சமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விளம்பரம்

இது தொடர்பாக மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் என்ற பெயரில் 3 ஆடியோக்கள் கசிந்துள்ளன.

எச்சரிக்கை… மாரடைப்புக்கான இந்த 5 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.!
மேலும் செய்திகள்…

ஒரு ஆடியோ 71 வினாடிகளும், மற்றொரு ஆடியோ 46 வினாடிகளும் மூன்றாவது ஆடியோ 28 வினாடிகளையும் கொண்டுள்ளன. அதில் ஒரு ஆடியோவில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் என்ற பெயரில் பேசிய ஒரு பெண், பெண் மருத்துவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரின் பெற்றோரிடம் கூறியது போன்று பதிவாகி உள்ளது.

விளம்பரம்

காய்ச்சலா என்று பதிலுக்கு பெற்றோர் கேட்க அது குறித்து மருத்துவர் தான் தெரிவிப்பார் என்றும் உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வாருங்கள் என்றும் அந்த முதல் இரண்டு ஆடியோ கிளிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:
மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மூன்றாவது கிளிப்பில், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், தற்போது அவர் உயிரோடு இல்லை என்றும் பெற்றோரிடம் மருத்துவமனை தரப்பில் கூறியதாக பதிவாகி உள்ளது..

ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 10.53 அளவில் மருத்துவமனையில் இருந்து தனக்கு முதல் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தானும் தனது மனைவியும் மருத்துவமனைக்கு செல்வதற்குள்ளான 30 நிமிடங்களில் மேலும் இரண்டு அழைப்புகள் வந்ததாகவும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்திருந்தார்.

விளம்பரம்
இரத்த சர்க்கரை அளவை விரைவாகக் குறைக்க உதவும் 10 சாறுகள் மற்றும் பானங்கள்.!
மேலும் செய்திகள்…

தற்போது வெளியான ஆடியோக்களால் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை மறைக்கும் வகையில், தற்கொலை என மருத்துவமனை நாடகமாட முயற்சித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆடியோக்கள் குறித்து மருத்துவமனை தரப்பிலும், மருத்துவரின் பெற்றோர் தரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இதற்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிக்க:
எம்.எல்.ஏ முகேஷ் பதவி விலகத் தேவையில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு….

விளம்பரம்

இந்த ஆடியோக்கள் வெளியான சில மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொல்கத்தா மத்தியப் பிரிவு துணை ஆணையர் இந்திராணி முகர்ஜி, மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் சொல்லவில்லை என்பது இந்த ஆடியோக்கள் மூலம் உறுதியாவதாக தெரிவித்தார்.

மருத்துவர் படுகொலையில் முக்கிய புள்ளிகளைக் காப்பாற்ற ஆதாரங்களை அழிக்க முயற்சிகள் நடப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில், இந்த ஆடியோக்கள் மேலும் சந்தேகத்தை கூட்டியுள்ளதாக சக மருத்துவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
kolkata
,
Kolkata Doctor Murder Rape

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!