பெரியாறு அணை உடையும் என்றவர் வாங்கிய ஓட்டு 4437 – நோட்டாவை விட குறைவு

கூடலுார்: பெரியாறு அணை உடையும் என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி கேரள மக்களையே தன் வசம் இழுத்த ரசல்ஜோய் இடுக்கி தொகுதியில் வாங்கிய ஓட்டு 4437. இது நோட்டாவை விட குறைவாகும்.

முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்து கேரள மக்களின் கதாநாயகன் ஆனவர் ரசல்ஜோய். ‘சேவ் கேரளா’ என்ற முழக்கத்தை முன்வைத்து அமைப்பை துவக்கி நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்.

இவர் இடுக்கி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக இருந்தார். கேரள மக்களிடம் பெரியாறு அணை விசயத்தில் பிரபலமான இவர் வாங்கிய மொத்த ஓட்டுகள் 4437 ஆகும். தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த ஓட்டுகள் 9519. நோட்டாவை விட குறைந்த ஓட்டுகள் வாங்கிய இவரை இடுக்கி மாவட்ட மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!