பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்ற கொடூர தந்தை…

பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை… மறுத்ததால் கல்லால் அடித்துகொன்ற கொடூரம்!

தெலங்கானாவில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததற்காக 12 வயது மகளை மதுவுக்கு அடிமையான தந்தை கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மியாப்பூருக்கு, மகுபதியை சேர்ந்த குடும்பம் 15 நாட்களுக்கு முன்னர் குடியேறியுள்ளது. தாய், தந்தை, 12 வயது மகள் உள்ள அந்த குடும்பத்தின் தந்தை மதுவிற்கு அடிமையாக இருந்துள்ளார். சம்பவத்தன்று மகளை கடைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய பின்னர் வீடு திரும்பிய போது வீட்டிற்கு செல்லாமல் தனது மகளை ஆள் அரவமற்ற காட்டு பகுதிக்கு தந்தை அழைத்து சென்றுள்ளார்.

விளம்பரம்

மகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மகளிடம் பாலியல் சீண்டலை தொடங்கியுள்ளார் குடிகார தந்தை. அதனை புரிந்து கொண்ட மகள் தந்தையிடம் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை துரத்தி பிடித்து கீழே தள்ளிய நிலையில், இங்கு நடந்தவற்றை அம்மாவிடம் கூறி விடுவேன் என மகள் அழுதப்படியே கூறியுள்ளார். இதனால் பயந்து போன தந்தை மகளை கல்லால் அடித்து கொன்றதோடு மகளை காணவில்லை என மனைவியோடு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீங்கள் விரைவாகவும் நன்றாகவும் தூங்க உதவும் 8 பானங்கள்.!
மேலும் செய்திகள்…

சில நாள்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சிறுமியின் கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியின் சிசிடிவியை ஆராய்ந்த போது தந்தையுடன் மகள் சென்றிருப்பது தெரிய வந்தது. தந்தையை விசாரித்த போது நடந்தவற்றை கூறிய அவர் மானம் போய்விடும் என்ற பயத்தில் மகளை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தது. தந்தையே மகளை பாலியல் வன்கொடுமைக்கு முயன்று கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
sexual abuse
,
sexual harassment
,
Telangana

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்