பேருந்தில் பயணிகள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை -இளைஞர் கைது

பேருந்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு அதே பேருந்தில் இருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் இன்று(செப். 10) காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த பேருந்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் அந்த நபர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண்மணி, அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து கண் சிமிட்டும் நேரத்தில் பேருந்திலிருந்து வெளியே சாடிய அந்த நபர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எனினும், பேருந்திலிருந்த பயணிகளும் சாலையில் இருந்த மக்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் காயமடைந்த நபரை அதன்பின்,கஸ்பா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபர்ரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!