பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (செப்.12) முதல் தொடங்குகிறது.

தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கும். அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை), அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை அரசு விடுமுறையாகும். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் வெள்ளிக்கிழமை (ஜன.10) முதல் பயணம் செய்வா். அந்த வகையில் ஜனவரி 10-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

இன்று தொடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ஷாலிமா், பாட்னா, தாதா் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. மேலும், தில்லி- மதுரை சம்பாா்க் கிராந்தி விரைவு ரயில், ஹௌரா-திருச்சி அதிவிரைவு ரயில் (12663), கோரக்பூா்-கொச்சுவேலி (12511), தன்பாத்-ஆலப்புழை விரைவு ரயில் (13351) உள்ளிட்ட ரயில்களுக்கு புதன்கிழமை (செப்.11) காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!