பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு

அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு ஆணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வை கடந்த மாதம் 18ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு ஆணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 5 ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 2.3 செ.மீ. ஆகவும், அகலம் 1.2 செ.மீ ஆகவும் எடை 2 கிராம் ஆகவும் உள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!