போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை பா.ஜ.க. தலைவர் கைது

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை,

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் உதயா. இவர் இன்று காலை காரில் சென்றபோது, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளர் அழகு ராணி சீட் பெல்ட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக உதயாவுக்கும் சார்பு ஆய்வாளர் அழகு ராணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உதயா, அழகு ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயா தகாத வார்த்தைகளால் திட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் அழகு ராணி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிவகங்கை காவல் நிலையம் முன்பு பா.ஜ.க. நிர்வாகிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING || சிவகங்கை நகர பாஜக தலைவர் கைது
போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பாஜக தலைவர் உதயா கைது
சிவகங்கை காவல் நிலையம் முன்பு குவிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் போலீசாரால் பரபரப்பு
காரில் பயணித்த பாஜக நிர்வாகி உதயா சீட் பெல்ட்… pic.twitter.com/M0QvtsENop

— Thanthi TV (@ThanthiTV) June 23, 2024

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்