மகளிர் ஆசிய கோப்பை : நேபாளம் அபார பந்துவீச்சு… யு.ஏ.இ. 115 ரன்கள் சேர்ப்பு

நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக இந்து பர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நேபாளம் அணியின் கேப்டன் இந்து பர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய யு.ஏ.இ. பேட்ஸ்மேன்கள் நேபாள அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆரம்பம் முதலே தடுமாறிய யு.ஏ.இ. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக இந்து பர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

அஸ்வின் அபார பந்துவீச்சு; வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் – வங்காளதேச முன்னாள் கேப்டன்

டெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்