மகளிர் ஆசிய கோப்பை; ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா? – நேபாளத்துடன் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் யு.ஏ.இ அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முன்னைப்பில் உள்ளது.

அதேவேளையில் நேபாளம் அணி 2 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வி கண்டு உள்ளது. அந்த அணி தனது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன.

Related posts

அஸ்வின் அபார பந்துவீச்சு; வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் – வங்காளதேச முன்னாள் கேப்டன்

டெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்