மகளிர் டி20 உலகப்கோப்பை தொடர்: புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகப்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணியின் வழக்கமான கேப்டனான நிடா தார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிடா தார் சாதாரன வீராங்கனையாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தார், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப் மற்றும் துபா ஹாசன்

ரிசர்வ் வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம் மற்றும் உம்மி ஹனி

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா